Thursday, December 24, 2009

அப்பா சைக்கிள்



அய்யனார் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில்  மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவதை கவனித்துக் கொண்டே வந்தான்.அதில் ஒரு குழந்தைக்கு அதன் அப்பா மிகுந்த ஆர்வத்துடன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.அய்யனார் வீட்டிலும் ஒரு சைக்கிள் இருந்தது.ஆனால் எப்போதுலிருந்து அது தன் வீட்டில் இருக்கிறது என்பது அவனுக்கு நினைவில்லை.அவனுக்கு நினைவு தெரிந்த காலம் முதலே அது அவர்கள் வீட்டில் இருந்தது. அவன் சிறுவயதில் யாறேனும்  ' உங்க வீட்டில யாரு எல்லா  இருக்கிங்க ? என்று கேட்டால் அவன் பதில் 'அம்மா,அப்பா,அண்ணன்,அக்கா,சைக்கிள்  ' என்பதாகத்தான் இருக்கும்.சைக்கிளையும் ஒரு குடும்ப உருப்பினராகவே கருதிவந்தான்.

பள்ளி செல்லாத வயதில் எப்போதும் சைக்கிளுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சைக்கிளின் சக்கரத்தை வேகமாக சுற்றி டைனமோவை இயக்கிவிட்டு விளக்கு எரிவதை பார்ப்பதே அந்நாளில் அவனுக்கு பிடித்த விளையாட்டு. அந்த சைக்கிள் நல்ல உயரம். நல்ல கம்பீரம். கரும் பச்சைநிற வர்ணம் தீட்டப்பட்ட‌ சைக்கிள். அதன் கைப்பிடிகள் வலுவானவை. கைப்பிடியின் உறை கருப்பானது. கைப்பிடிக்கு சற்று மேலே அழகான பெல். பெல் பார்ப்பதற்கு பள பளப்புடன் இருக்கும். அது எழுப்பும் ஒலி இனிமையானது.

முன் கம்பியிலும்,சீட்டிலும் அழகாக தைக்கப்பட்டு அணிவிக்கப்பட்ட கவர். அதில் ' தி யுனைட் சைக்கிள் மார்ட் ' என்ற விளம்பரம். இரண்டு சக்கரங்களுக்கு நடுவிலும் வண்ணங்கள் நிறைந்த நார் போன்ற சுலலும் தன்மையுடைய சிறிய சக்கரம். சைக்கிளின் முன்புறம் கூம்பு வடிவ டைனமோ லைட். அதை பாதுகாக்க மஞ்சள் நிற பஞ்சு துணி. சைக்கிளின் பின்புறம் வட்ட வடிவ டேன்சர் லைட். மட்காடில் அண்ணன் ஒட்டி வைத்த கபில்தேவ் படம். இரண்டு பெடல்களுக்கும் சிவப்பு நிற உறை. பச்சை நிற ஷ்டாண்ட் என பார்பதர்கே சைக்கிள் அழகாக‌ இருக்கும்.

சைக்கிளை நிறுத்துவதற்க் கென்றே அய்யனாரின் அப்பா வீட்டின் முற்றத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்திருந்தார். அப்பா வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் சைக்கிள் முற்றத்திலேயே நிற்கும். அந்நாட்களில் சைக்கிளின் பிரதான பயன்படுத்தி அப்பா மட்டுமே. அலுவலுக்குச் செல்லும் பொதும், கடைத் தெருவுக்கு செல்லும் பொதும் அதை அன்றாடம் பயன்படுத்தி வந்தார்.வீட்டிலிருந்து முக்கிய வீதியை அடைய‌ வேண்டுமென்றால் ஒரு பெரிய ஏற்றத்தை கடக்க வேண்டும். அய்யானாரின் அப்பா அந்த ஏற்றத்தை கடக்கும் போது எப்போதும் சைக்கிளிள் இருந்த்து கீழே இறங்கி உருட்டிக் கொண்டுதான் செல்வார்.கேட்டால் ஏற்றத்தில் சைக்கிள் மிதிப்பது கடினம் என்பார்.அய்யானார் வெளியூரில் இருக்கும் காலங்களில் அப்பாவை நினைத்து கொள்ளும் போது அப்பா அந்த சைக்கிளுடனே காட்சி அளிப்பார்.

சைக்கிள் ஓட்டத் தெரியாத காலங்களில் அதன் மீது ஏறி சைக்கிள் ஓட்டுவது போல் பாவனை செய்து கொள்வான் அய்யானார். குழந்தையாக இருந்த போது அவனுக்கு அம்மா நிறுத்தி வைக்கப் பட்டுள்ள சைகிளில் வைத்தே சோறு ஊட்டுவாள்.அம்மாவிற்கு அவன் அழுகையை நிறுத்துவதில் எப்போதும் சிரமம் இருந்தது இல்லை. சைக்கிளின் மணியை அழுத்தினால் உடனே அழுகையை நிறுத்திவிடுவான்.

சைக்கிள் ஓட்டுவது அய்யனாருக்கு கனவாகவே இருந்தது. சைக்கிள் கற்றுக் கொடுக்கும்படி அய்யனாரின் அண்ணனிடம் கூறி அதற்க்கான வாய்ப்பை அப்பா அளித்தார். அண்ணன் என்றதும் அய்யானார் சற்று யோசித்திருக்க வேண்டும். பாவம் சிறுவன் . அவனுக்கு அப்போது அது தொன்றவில்லை. நம்பிக்கை வைத்து அண்ணனுடன் சென்றான். முதலில் அன்புடனே கற்றுத்தற ஆரம்பித்தவன் நேரம் செல்ல செல்ல வெறுப்படைய ஆரம்பித்தான். என்ன செய்வது அய்யனாருக்கோ நேரே பார்த்து ஓட்டமுடியாமல் கண்கள் எப்போதும் பெடலுக்கே சென்றது. அப்படி செல்வதால் கைகல் ஆட ஆரப்பித்து வலைந்து நெளிந்து எல்லா முயற்சியிலும் கீழே விழுந்தான். அந்த வயதில் அய்யானாருக்கு மீசை இல்லாததால் மண் ஏதும் ஒட்டவில்லை. இபோது மீசை இருக்கிறது ஓட்டினாலும் பரவா இல்லையாம் . கேட்டாள்  ' என் மண்  ' என பிதட்றுவான்.

கோபத்தின் உச்சியை தொடுவது என்பது அய்யனாரின் அண்ணனுக்கு ஒன்ரும் அறிய விசயமில்லை. கோபம் அதை ஏற்றுக் கொள்பவனையே அழித்துவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் அன்று அய்யானாருக்கு நடந்தது அதற்க்கு முற்றிலும் எதிர்பதம். கோபத்தின் உச்சத்தில் அண்ணன் அய்யனாரை சைக்கிளொடு வைத்து தள்ளிவிட்டான். சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்கள் தரையில் எட்டாத நிலையில் நிலைத‌டுமாறி கீழே விழுந்தான். கனுக்காலிள் சிறிய கல் ஒன்ரு குத்தி குருதி வடிய ஆரம்பித்தது. இன்றும் அந்த வடு அதன் மாறாத நினைவுகளோடு அய்யானாரிடம் இருக்கிறது.

அண்ணன் எதைப் பற்றியும் கவலை படாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். அய்யானாருக்கோ பெருத்த அவமானமாக‌ ஆகிவிட்டது. காரணம் அவன் விழுவதை அவனுக்கு எல்லா விசயத்திலும் போட்டியாக அவன் குடுப்பத்தாரால் உருவாக்கப்பட்ட எதிர் வீட்டு பையன் பார்த்து விட்டான் என்பதே.

அன்று முதல் சைக்கிள் ஓட்டுவது என்றாலே அவனுக்கு பதற்றம் கொள்ள ஆரம்பித்தது. அம்மாவின் வேண்டுதலுக்கு இனங்கி அப்பாவே அவனுக்கு சைக்கிள் கற்றுத்தந்தார். இப்போது முழுமையாக சைக்கிள் ஓட்ட வராவிட்டாலும் அவன் வீட்டு தெருமுனை வரை கீழே விழாமல் அவனால் சவாரி செய்ய முடிந்தது. அதுமட்டுமல்ல அம்மா அவனை அதற்கு மேல் அனுமதிப்பதில்லை. பள்ளியில் அய்யானர்தான் முதல் மாணவன்.ஆச்சர்யப்பட வேண்டாம்.பள்ளி முடியும் மணி அடித்தவுடன் வகுப்பில் இருந்து முதலில் வெளியேறும் மாணவர்களில் அவன் தான் முதல். அதற்கும் காரணம் இருந்தது. மாலை நேரங்களில் அண்ணன் தொந்தரவு எதுவும் இன்றி சைக்கிள் ஓட்டலாம். இந்த வாய்ப்பை அய்யனார் சரியாக பயன் படுத்தி சில நேர்த்திகளை கற்றுக் கொண்டான்.

அவனுக்கு சவாலக ஒரு  நிகல்வு நடந்தது. அய்யானாரின் அம்மாவிற்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. ஊரின் பெரிய வெற்றிலைக் கடையில் வாங்கியதென்றால் விரும்பி சுவைப்பாள்.  அந்த கடையோ வீட்டிலிருந்து தூரத்தில் இருந்தது. நடந்து செல்வதென்றால் சற்றே சங்கடத்தை ஏற்படுத்தும். அம்மா சந்தைக்கு செல்லும் போது நாண்கு தினங்களுக்கு தேவையான வெற்றிலைகளை வாங்கி வைத்துக் கொள்வாள். அம்மாவும் அய்யானாரும் மட்டும் வீட்டிலிருந்த தருனத்தில் வெற்றிலை பெட்டியில் வெற்றிலை தீர்ந்து விட்டது. அம்மாவிற்கு வெற்றிலை போட்டே ஆக வேண்டும். வீட்டு வேலைகள் சரியாக இருந்ததால் அவனிடம் வாங்கிவரும்படி காசை கையில் தினித்தாள். அய்யானார் சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடந்து செல்வதென்றால் முடியாது என்றும். சைக்கிள் கொடுத்தால் வாங்கி வருவதாகவும் அடம் பிடித்தான். அம்மாவும் நீண்ட யோசனைக்கு பிறகு அனுமதித்தாள். போகும் போது சாலையை இருபுறமும் பார்த்து கடக்க வேண்டும் போன்ற சில ஆலோசனைகள் கூறி அனுப்பினாள்.

அய்யனாரும் வெற்றிகரமாக தெருமுனையா கடந்து  இரண்டு பெரிய கடைத் தெருவையும் தாண்டி அம்மாவிற்கு வெற்றிலை வாங்கிதந்து விட்டான். அன்று முதல் அவனுக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவனின் சைக்கிள் ஓட்டும் திறனில் புதிய நம்பிக்கை பிறந்தது. அம்மாவின் வெற்றிலை பழக்கம் அய்யானாருக்கு பிடிக்கவில்லை.உடலுக்கு நல்லதல்ல என பல முறை கூறியிருக்கிறான். அவளின் அந்த பழக்கத்திற்காகவுகும் கடை தூரத்தில் இருந்ததற்க்காகவும் இப்போது மனதிற்குள் நன்றி தெரிவித்திக்கொண்டான். அப்பொது முதல் அய்யானாரின் சைக்கிள் சாவாரியின்  எல்லைகள் விரிய ஆரம்பித்தது.ஊரின் சந்து பொந்து அனைத்திலும் ஊர் சுற்றி வந்தான்.

அய்யனாருக்கு சைக்கிள் ஓட்டுவது இப்போது துச்சமாக மாறிவிட்டது. சைக்கிள் அவன் சொல்வதை எல்லாம் கேட்ட‌து. அவன் நிறுத்தினால் சரியான இடத்தில் நின்றது.கையை விட்டு ஓட்டினால் சரியான நேர்கோட்டில் ஓடியது.நண்பர்களை வைத்துக் கொண்டு டபுல்ஷ்,த்ரிபுல்ஷ் அடிப்பது எல்லாம் இப்போது அவனுக்கு அத்துப்படி.ஆனால் அப்போதிலிருந்து அதுவரை அவன் அண்ணன் பார்த்துக்கொண்டிருந்த வேலைகள் எல்லாம் இவன் தலையில் கட்டப்பட்டது.அப்படி என்ன வேலை என்று யோசிக்க வேண்டாம்.ரேஷன் கடைக்கு மண்எண்னைய் வாங்கச் செல்வது.ரைஷ் மில்லிர்க்கு மிளகாய் பொடி அரைக்க செல்வது அம்மாவை சந்தைக்கு கூட்டிச் செல்வது என பல வேலைகள்.அப்போதுதான் உணர்ந்தான் சைக்கிள் ஓட்டுவது சிரமம் அதுவும் எதிர்காற்றில் ஓட்டுவதென்றால் கேட்கவே வேண்டாம் என்று.அப்பாவின் சிரமமும் அவனுக்கு புரிந்தது.

அய்யனார் மேல்நிலை பள்ளியில் படித்தபோது பள்ளிக்கு செல்கையில் சைக்கிள் செயின் கலண்டு விட்டது.உட்கார்ந்து சரி செய்து கொண்டிருக்கும் போது அவன் சக‌ வகுப்பு தோழிகள் அவனை பார்த்த படியே கடந்து சென்றனர். அன்று பள்ளியை அடைய சற்று தாமதமாகிவிட்டது. ஆசிரியர் அய்யனாரை வகுப்புக்கு வெளியே அரைமணி நேரம் காக்க வைத்து விட்டார். வகுப்பு தோழிகள் சிலர் தங்களுக்குள் ஏதோ பேசி இவனை பார்த்து சிரித்தனர். இந்த நிலைக்காக சைக்கிளின் மீது கோபப்பட்டான் அய்யானார்.

நண்பர்களுடன் பக்கத்து கிராமத்திற்க்கு சைக்கிளில் சென்று பனங் கல் அருந்திவிட்டு உளரியதை இன்று வரை யாரிடமும் காட்டிக் கொடுத்து விடவில்லை சைக்கிள். கல்லூரி காலங்களில் அய்யானர் வருத்தமாக இருக்கும் போது சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகுதூரம் பயணம் செய்வான். கல்லூரி படிப்பவனுக்கு கவலை என்ன இருக்கு எதாவது காதல் கத்திரிக்காயாக இருக்கும் என்று நிங்கள் நினைத்தால் அது தவறு. அவனுக்கு இருந்த கவலையே வேறு.மொத்தமாக இரண்டு வருட தேர்வுகளிளும் தேர்ச்சி அடையாமல் இருந்தான். மூண்றாம் ஆண்டிலாவது அனைத்திலும் தேர்ச்சி அடைய வேண்டிதான் அந்த பயணம். தேர்வுக்காக கொடுக்கப்பட்ட விடுமுறையில் மனித நாடமாட்டமே இல்லாத இடத்திற்கு சைக்கிள் சென்று படித்துகொண்டிருப்பான்.அது அவனுக்கு முமுமையாக உதவியது.

சைக்கிள் அய்யனார் வாழ்க்கையில் சில மகிழ்ச்சிகளையும்,சில கோபங்களையும்,சில அவமானங்களையும்,சில உற்ச்சாகங்களையும் மாறி மாறி தந்து கொண்டிருந்தது.

பட்ட மேற்படிப்புக்காக விடுதியில் தங்கியிருந்த போது அம்மா தொலை பேசியில் அய்யானாரை அழைத்து அப்பா புதிய TVS-50 வாங்கிய விசையத்தை தெரிவித்தாள். அய்யானாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வார விடுமுறை
க்கு சென்று ஓட்டிவிட வேண்டுயதுதான் என்று மனதிற்குள் முடிவு கட்டிக்கொண்டான்.

விடுமுறை தினத்தில் வீடு வந்த போது அந்த புதிய TVS-50 எலும்பிச்சை பழம்,சந்தனம் குங்குமம் சகிதம் அழகாக வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்தது. அப்பாவிடம் சாவி வாங்கி ஊரையே ஒரு சுற்று சுற்றி வந்தான். தன் நண்பர்களிடம் அதை காட்டி பெருமை பட்டுக்கொண்டான். இரண்டு தினங்களும் தன்னை மறந்து திரிந்தான். இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு உறங்கச் சொல்லும் முன் மொட்டை மாடியில் உலாத்திவிட்டு வீட்டிற்க்குள் நுழையும் போதுதான் அதை க‌வணித்தான். முற்றத்தில் TVS-50 மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தது. சைக்கிளை காணவில்லை.அம்மாவிடம் கேட்ட போது ' அப்பாதா சைக்கிள அந்த TVS-50 காடையிலேயே கொடுத்துட்டு இந்த TVS-50 ஐ வாங்கிட்டு  வந்தாரு , அந்த சைக்குளுக்கு வெறு ஆயிரம் ரூபாதா கழிச்சுக்கிட்டானா ' என்று கூறி சலித்துக்கொண்டாள்.

அப்பாவிடம் கேட்டபோது ' எனக்கும் வ‌யசாயிருச்சு அத மிதக்க வேற முடியல‌ , நிங்களு வேலை படிப்பு அப்படி இப்படினு வெளியூருல இருக்கிங்க எதுக்கு தேவ இல்லாம அது வேற இடத்தை அடச்சுக்கிட்டு அதுதா வந்த விலைக்கி தள்ளி விட்டுட்டே.அதுதா  TVS-50 இருக்குல அது போது ' என்று சாப்பிட்ட கையை கலுவிக் கொண்டெ கொள்ளை புறத்திலிருந்து முனங்கினார்.

அய்யானாரால் நம்ப முடியவில்லை.அப்பாவால் எப்படி அதை செய்யமுடிந்தது,தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அந்த சைக்கிளுடனே கழித்துவிட்ட அப்பா இப்போது எப்படி இந்த முடிவிற்க்கு வந்தார்.
தனக்கிறுந்த அனுபவம் போல அப்பாவிற்காகவும் சைக்கிள் பல எண்ணற்ற அனுபவங்களை தந்திருக்கும்.

மொட்டை மாடி கைப்பிடி சுவரில் சாய்ந்தபடி வானத்தை வெரித்து பார்ததுக்கொண்டு  நின்றான் அய்யானார்.

அப்பா இப்போது அவர்கள் வீட்டுத் தெருவின் ஏற்றத்தை நொடியில் கடந்து வீடுகிறார்.அம்மாவாள் அடிக்கடி அப்பாவுடன் கோவிலுக்கும் சந்தைக்கும் சிரமம் இன்றி செல்ல முடிகிறது.அக்காவிற்க்கும் TVS-50 ஓட்டி கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு.அண்ணனும் அய்யானரும் எதிர்காற்றை பற்றி கவலை படாமல் ஊர் சுற்றலாம். TVS-50 அய்யானாரின் குடுப்பத்தில் ஒரு அங்கமாக முயன்று கொண்டிருந்தது.எல்லாம் இருந்தும் என்ன‌ அந்த சைக்கிளின் இடத்தை வேறு எந்த விசயத்தாலும் நிறப்ப முடியவில்லை.

யாராவது அய்யானாரின் அப்பா சைக்கிளை கண்டால் அவனிடம் செல்லுங்கள்.அவன் சைக்கிள் நல்ல உயரம். நல்ல கம்பீரம். கரும் பச்சைநிற வர்ணம் தீட்டப்பட்ட‌ சைக்கிள். அதன் கைப்பிடிகள் வலுவானவை. கைப்பிடியின் உறை கருப்பானது. கைப்பிடிக்கு சற்று மேலே அழகான பெல். பெல் பார்ப்பதற்கு பள பளப்புடன் இருக்கும். அது எழுப்பும் ஒலி இனிமையானது !.

8 comments:

Mohan said...

அருமையான எழுத்து நடை. விவரனைகள் எல்லாம் 'ரொம்ப' நல்லா இருந்தது.இந்தப் பதிவை படித்தவுடனே,நான் ஓட்டி பழகின சைக்கிள் ஞாபகமும்,அழகான பள்ளிக்கூட வாழ்க்கையும் ஞாபகத்திற்கு வந்திருச்சு.

கமலேஷ் said...

உங்களோட ஒவ்வொரு வரியும் இருபது வருஷம் என்னை பின்னால் கூட்டிக் கொண்டு போய் திரும்ப வருகிறது...ரொம்ப ஆழமான பதிவை செய்து இருக்கறீர்கள்.. உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை...முடிவு நிறையவலியும் , சிலிர்ப்பும் கொடுக்கிறது...இன்னும் நிறைய பதிவுகள் இது போல உங்களிடம் இருந்து வரவேண்டும் எனபது இந்த வாசகனின் ஆசை...வாழ்த்துக்களுடன்..கமலேஷ்.கி

ரிஷபன் said...

யாராவது அய்யானாரின் அப்பா சைக்கிளை கண்டால் அவனிடம் செல்லுங்கள். என்ன ஒரு அழகான பதிவு! ரசித்துப் படித்தேன்.. அப்படியே ஒரு கால கட்டத்தை சுவாரசியமாக படம் பிடித்து விட்டீர்கள்! (அப்படியே கொஞ்சம் எழுத்துப் பிழைகளையும் சரி பார்த்துக்குங்க.. பிளீஸ்)

அன்பேசிவம் said...

அருமையா இருக்கு நண்பா, நீங்க இதிலேயே இதுபோன்ற எழுத்துக்களிலேயே கவனமெடுக்கலாம், உணரப்படும்படியான எழுத்துக்கள், வாழ்த்துகள். என்னிடமும் இப்படி ஓரு நினைவு உண்டு.

Unknown said...

"அவன் சைக்கிள் நல்ல உயரம். நல்ல கம்பிரம். கரும் பச்சைநிற வர்ணம் தீட்ட பட்ட‌ சைக்கிள். அதன் கைப்பிடிகள் வலுவானவை. கைப்பிடியின் உறை கருப்பானது. கைப்பிடிக்கு சற்று மேலே அழகான பெல். பெல் பார்பதற்கு பள பளப்புடன் இருக்கும். அது எழுப்பும் ஒலி இனிமையானது" cycly patriya varnanai arumai. veru yarum idai vida azhagaga solla mudiyadhu. cycle payanathai pudidaha ooti pazhakiya oru siruvanin anubavam enakkum irunththu. adhai nandragave ullathu. en thambikku cycle ooti pazhakkiya anubavathi meendum "appa cycle" il mulam thirumbi parkum oru anubvam. arumai. oru kadhaiyai eppadi aramithayo appadiye mudithavidham arumai (cycle pattri arambathil solli appadiye mudithathau). cycle oti pazhagiyathum velai seiya kathukidappathum athuve velai sumayaga maruvdai sonnavidam arumai.(naanum athai anubavithu ullen).ethir kaatri cycle ottuvathi ulla appavin siramathai unarum idam aruma. ellavatrayum vida unmayana magilchi nam andrada valvi kaividappatta pazhamaiyil ulla visayangali moolaiyil kidathivittu veeru etho ondrai theedi thirivadai saadiya un varigal aarumai. pudumaudan(TVS-50) pottipoda mudiyamal thotrupona pazhamayai (CYCLE)vitruviduvathal nam peruvtu tharkaliga santhosamthane thavira naam izhanthu unmayana santhosam. ithu intha sirukadaiyail varum TVS-50, CYCLE MATTUM ALLA. ETHANAYO ULLANA. KEEP WRITTING. NICE.REALLY SUPER RA PAZHANI.

Unknown said...

samibathil naan pirantha pothu vangiya cycli enathu periyappa nadakka sirama padukirar endu en ammavidam veetil summathane mulaiyil nirkirathu endru vaangi sendru adai nalla vilai varugirthendru engalidam ketkamal athai vitruvita valiyai intha kathin mulam ninavu paduthi parkiren. periyappa cycle i vitra pin than engalukku therinthathu avar unmaileya avar "nadakka siramapadavillai kaiyil kasuillamal siramapadukirar endu" athu mudhal enathu madha sambalathil irunthu avarukku panam anupuda endru moolaiyil urangikondu iruntha cycle englidam kobithu kondu avrodu sendru vittathu endru enakku un kadhaiyai padithavudan purinththu. nandri palaniyappa

manmadhans chat said...

try to avoid spelling mistakes in tamil in 4 places i saw splling mistake like nikalu,kalluri,nulaiyum, other than this i loved this appa cycle

கா.பழனியப்பன் said...

கருத்துறைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
புத்தாண்ட்டு நல்வாழ்த்துக்கள்

Post a Comment