Friday, May 14, 2010

ரசம் போன கண்ணாடி

ஞாயிற்றுக் கிழமை காலை.அய்யனார் அம்மா தேடிக்கொடுத்த பழைய சொக்காயை போட்டுக்கொண்டு தயாராக இருந்தான்.அப்பா சைக்கிளை வீட்டிற்க்கு வெளியே எடுத்து நிறுத்திவிட்டு இவனுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

அய்ய‌னார் கேட்டான் " அம்மா கோவிலுக்கு எதுவும் வேண்டுத‌ல் இல்லையா? " அம்மா சொன்னாள் " உன‌க்கு இப்போதைக்கு ஏதுவும் வேண்டுத‌ல் இல்லை,அண்ணனுக்குத்தான் வருகிற‌ ப‌ங்குனி மாத‌ம் வேண்டுத‌ல் இருக்கு. ! "

அம்மா சொன்ன‌ ப‌தில் அவ‌னுக்கு ஏமாற்ற‌ம் அளித்த‌து.அண்ணனைப் போல‌ தன‌க்கும் அடிக்க‌டி உட‌ம்புக்கு வ‌ந்திருந்தால் த‌ன‌க்காக‌வும் அம்மா வேண்டிக்கொண்டிருப்பாள் .தான் ஒரு அபாக்கிய‌சாலி என்று நினைத்துக் கொண்டான்.

அப்பா சத்தம் போட்டார் " இன்னு என்னடா செஞ்சுக்கிட்டு இருக்க உள்ள? "
அப்பாவின் குரல் கேட்டதும் குடு குடு என்று வெளியே வந்து சைக்கிளிள் ஏறிக்கொண்டான்.அப்பா அவனின் கால்க‌ள் இர‌ண்டையும் முன்னால் இருக்கும் கம்பியில் பெருக்கல் அடையாளம் போல பின்னி இருக்கும்ப‌டி செய்தார்.அவனின் ப‌ய‌ணம் ஆர‌ம்ப‌மான‌து.அய்ய‌னாருக்கு காலில் போட்டிருக்கும் மிதிய‌டி கிழே நலுவி விழுந்துவிடும் போல் இருந்த‌து.கால் விர‌ல்க‌ளால் அதை இருக்க‌ப் ப‌ற்றிக்கொண்டான்.கைக‌ள் இர‌ண்டையும் சீட்டுட‌ன் இருக்க‌ப் பிடித்திருந்தான்.த‌லையை அப்பாவின் முதுகோடு சாய்த்திருந்தான்.கால்க‌ள் அவ்வ‌‌ப்பொது அவ‌ன் பேச்சை கேட்காமல் தன்னை சுதந்திரப்படுத்திக் கொள்ளும் பொழுதெல்லாம் அதை மீண்டும் பின்னிக்கொண்டான்.இந்த இறுக்கமான‌ ப‌ய‌ணத்திலும் அண்ணனைப் ப‌ற்றி பொறாமை பட தவறவில்லைஅய்ய‌னார்.

அண்ணனுக்கு இன்னும் மூன்று மாதத்திற்க்கு இவன் அனுபவிக்கப்போகும் இந்த அவஷ்த்தை இருக்கப்போவதில்லை.அம்மா அவனுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல் செய்துள்ளாரே.அப்பாவும் அய்யனாரும் இப்போது சென்று கொண்டிருப்பது முடி திருத்தகத்திற்க்கு.அது அவர்கள் வீட்டில் இருந்து சற்றே தொலைவில் இருந்தது.

முடி திருத்த‌க‌ம் அமைந்திருக்கும் இட‌ம் க‌ண்மாயை ஒட்டி.க‌ண்மாயின் ப‌க்க‌த்தில் அத‌ன் மேடான பக்கத்தில் ஒரு சாலையும், சாலை முழுவதும் புளிய மரங்களும் இருந்தன.கண்மாயில் பொதுமான அளவு தண்னீர் இருந்தது.அதன் கிழக்கு மூலையில் தாமரைக் கொடி படர்ந்து இருந்தது.

இந்த முடிதிருத்‌தகம் மற்ற முடி திருத்தகத்திலிருந்து சற்று மாறுபட்டது.அதற்க்கு பெயர் பலகை எதும் இல்லை.அங்கு சுழலும் நாற்க்காலி இல்லை.மதிலில் முன்னும் பின்னும் அரையப்பட்ட கண்னாடிகள் இல்லை.புஷ் புஷ் என்று தண்ணீரை பீச்சி அடிக்கும் தண்ணீர் குவளை இல்லை.மனம் பரப்பும் பவுடர்கள் கிடையாது.ச‌வ‌ரம் செய்தபின் போட்டுக்கொள்ளும் குளிர்ந்த திர‌வம் ஏதும் இல்லை.

அங்கு இருந்ததொல்லாம் இரண்டு கத்திரிகளும்,அழுக்கடைந்த சீப்பும்,ஒரு சவரக் கத்தியும்.பாதி உடைந்த ரசம்போன கண்ணாடியிம்.வாய்பிழந்த மண்குடமும்,மூக்கு நெளிந்த கிண்னமும் மட்டுமே . ‌

திருத்தகத்தின் மேல் கூறை பன ஓலையாள் வெயப்பட்டிருந்தது.கடை என்று செல்லும் தகுதிக்காக நான்கு புறமும் இடுப்பு அளவே உள்ள மதில் இருந்தது.அய்யனார் திருத்தகத்திற்க்குள் நுழையும் போதே முடி வெட்டிக்கொள்ள் சிலர் காத்திருந்தனர்.அய்யனார் அமைதியாக சென்று வலதுபுறம் இருந்த குட்டி மதிலில் ஏறி அமர்ந்து கொண்டான்.அப்பா

உள்ளே நுழைந்ததைப் பார்ததும் பேச்சி அவரை வரவேற்று " யாருக்கு வெட்டனு தம்பிக்கா இல்ல உங்களுக்க ? " என்று கேட்டு உறுதிபடித்திக்கொண்டார்.

இந்த கடைக்கு பெயர் ஒன்றும் கிடையாது.அய்யனார் அதை பேச்சி கடை என்றே அறிந்திருந்தான்.பேச்சிதான் அந்த திருத்தகத்தின் உரிமையாளன்.அப்பா மேற்க்கூறை மேல் சோறுகி இருந்த காலாவதி ஆன பத்திரிக்கைகளில் ஒன்றை தேடி எடுத்து இவனுக்கு அருகில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார்.

பேச்சி பார்ப்பதற்க்கு ஒட்டடை குச்சி போல் இருப்பார்.தலை மயிர்கள் எல்லாம் வெள்ளை ஆடை தரித்திருந்தது. கழுத்தில் இருந்த சங்கு புடைத்து அவ்வப் போது மேலும் கிழும் ஏறி இறங்கியது.வலது காதின் மேல் ஒரு பீடி.வாய் நிறைய புகையிலை அதனல் சாமியார் வேடம் அணிந்த பர்க்கள்.மடித்துக் கட்டிய கைலி.முழங்கைக்கு மேலே சுருட்டி விடப்பட்டிருந்த வெள்ளை சொக்காய் என பார்ப்பதற்க்கு வினொதமாய் இருப்பார் பேச்சி.

அய்யனார் அமைதியாக காத்திருப்பது போல தோன்றினாலும்.அவன் மனம் அமைதியற்றே இருந்தது.அதற்க்கு காரணம் பேச்சியிடம் மாட்டிக்கொள்ளப் போகும் அந்த இருபது நிமிடங்கள்.

இப்பொது இவன் முறை வந்தது.அய்யனார் சொக்கயை அப்பாவிடம் கழற்றி கொடுத்துவிட்டு பேச்சியின் முன் சென்று நின்றான்.பேச்சி அவன் தோல்பட்டைய பிடித்து அழுத்தி தன் முன் அமர்த்தினான்.அவனை அப்படி அம‌ர்த்திவிட்டு காதில் இருந்த பீடியை எடுத்து பற்ற வைத்து புகைக்கத்தொடங்கினார்.நான்கு இழுவைகளுக்குப் பிறகு அதை அனைத்து மீண்டும் காதில் எடுத்து வைத்துக்கொண்டார்.

பேச்சி கிண்ணத்திலிருந்து கைநிறைய தண்ணீரை எடுத்து அய்யனாரின் தலையின் எல்லா புறங்களிழும் தெளித்து தடவினார்.அய்யனார் தலையை கவிழ்ந்து தரையப் பர்த்துக்கொண்டிருந்தான்.தண்ணீர் தலையிலிருந்து

இறங்கி மூக்கின் வழியாக வழிந்து நுனியில் சிறிது நேரம் இலைப்பாறி சொட்டிக்கொண்டிருந்தது.சில அதில் பாதை மாறி புருவத்தில் இருந்து இறங்கி தரையில் வந்து விழுந்தது.

பேச்சி இடது கையாள் சீப்பை எடுத்து முடியை அழகாக பிரித்தார்.அப்படி செய்து கொண்டிருக்குப்போதே வலது கையால் பிடித்திருந்த கத்திரியால் கரிச் கரிச் என்று சத்தம் வரும்படி செய்தார்.

இப்போது கரிச் கரிச் சத்தத்துடன் பேச்சி வேலைய ஆரம்பித்திருந்தார்.அய்யனார் காலில் கொத்து கொத்தாக மயிர்கள்
வந்து விழுந்தன.சில அய்யானரின் முகத்தில் வந்து அப்பிக்கொண்டது.அய்யனாருக்கு அதை துடைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது ஆனல் அவனால் அப்படி செய்துகொள்ள முடியாது. பேச்சி " ச்ச் அசையாமல் இரு " என்று சத்தம் போடுவார்.

அவருக்கு யார் பேச்சி என்று பெயர்வைத்தார்கலோ தெரியாது.வேலை செய்யும் போது பக்கத்தில் இருப்பவர்களிடம்
பேசிக் கொண்டே இருப்பார்.அரசியல் பற்றி பேசுவார்.சினிமவை பற்றி பேசுவார்.சென்ற வாரம் ரேஷன் கடைக்கு பாம் ஆயில் வாங்கச் சென்றதைப் பற்றி பேசுவார்.தன் மருமகள் தனுக்கு சோறு போடுவதில்லை என்று தொடங்கி பக்கத்து வீட்டு நாய் இரவு முழுவதும் குரைத்து தூக்கத்தை கெடுத்தது வரை மூச்சு விடாமல் பேச்சிக் கொண்டே இருப்பார்.

பேச்சி மற்றவர்களிடம் பேசுவதையாவது அய்யனாரினல் பொருத்துக்கொள்ள முடிகிறது.சில நேரங்களில் அவர் அய்யனாரிடமும் கேள்விகள் கேட்ப்பார்.அதில் முக்கால் வாசி பள்ளியை பற்றியதாக இருக்கும் அல்லது கணக்கு வாத்தியார் பற்றியதாக இருக்கும்.சில நேரங்களில் மனக்கண்க்கு வேறு கேட்டு அய்யனாரை தினறடித்துவிடுவார்.தலையை கீழே குனிந்து கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது அவனுக்கு
சிரமமாக இருக்கும்.அந்த நிலையில் இருந்து பதில் சொல்லும் போது இவனது குரலை இவனுக்கு கேடகவே வினோதமாக இருக்கும்.

ஒரு வழியாக இந்த போராட்டம் முடிவுக்கு வருவதற்க்குள் அய்யனார் பல முறை கழுத்தை குனிந்தே வைத்திருப்பான். சில நேரம் கழுத்தை பக்கவாட்டில் சாய்த்தே வைத்திருப்பான்.இரண்டு முறை பூமி போல் தன்னைத் தானே சுற்றி வந்திருப்பான்.

பேச்சியிடம் பிடிக்காதா மற்றொரு விசயமும் அய்யனாரிடம் இருந்தது. அது வேலை முடிந்ததும் தன்னிடம் கேட்க்காமல் அப்பாவிடம் கேட்டு " போதுமா இல்ல இன்னு குறைக்கனுமா " என்று உறுதிப்படுத்திக் கொள்வது.

அப்பா இதற்க்கு எப்போதுமே ஒரே பதிலை மட்டும் சொல்லுவார் " படிக்கிற பையன் தானே இன்னு நல்லா ஒட்ட வெட்டுங்க "

" நல்லா ஒட்ட வெட்டுங்க " இந்த வார்தையை மட்டும் கேட்டுவிட்டால் போதும் பேச்சியின் கத்திரி முன்பைவிட வேகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.மீண்டும் அந்த நீட்டிக்கப்பட போராட்டம் தொடங்கியது.அதே கரிச் கரிச் சத்தம்.அய்யனாரின் பற்க்கள் கூசியது.

வேலை முடிந்ததும் பேச்சி பாதி உடைந்த ரசம் போன கண்ணாடியை எடுத்து அய்யானாரின் முகத்திற்க்கு எதேரே நீட்டினார்.அந்த கண்ணாடி பாதி அய்யனாரின் முகத்தையும் பாதி எதிர் திசையில் இருந்த பேச்சியின் முகத்தையும் அவரது காவி அடைந்த பற்க்களையும் பிரதிபலித்தது.

அப்பாவிடம் சொக்காயை வாங்கி அணிந்துகொண்டான் அய்யனார்.அப்பா பேச்சியிடம் நான்கு ரூபாயை கொடுத்தார்.
பேச்சி கேட்டார் " இன்னு ரெண்டு ரூபா சேத்து கொடுங்க " அப்பா ஒரு ரூபாய் தாளை எடுத்து பேச்சியின் கையில் தினித்தார்.
பேச்சி அவர்கள் வெளிக்கிடும் போது சொன்னார் " கணக்கு வாத்தியார விசாரிச்சேன்னு சொல்லுப்பா "

முடி திருத்தகத்திற்க்கு சென்று விட்டு நேராக வீட்டிற்க்குள் நுழைய அம்மா ஒரு போதும் அனுமதிப்பதில்லை.பின்புற வாசல் வழியாக கிணற்றடிக்கு அவர்கள் சென்றார்கள்.அப்பா கிணற்றிலிருந்து தண்ணீர் இரைத்து அண்டாவை நிறைத்தார்.அய்யனாரை அரைக்கால் சட்டையை அவிழ்க்க கூறினார்.என்றாவது ஒரு நாள் இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொள்வான் அய்யனார்.அம்மா குளிக்க வைக்கும்போது

அவனுக்கு எந்த தயக்கமும் இருப்பதிலை.கால்ச் சட்டையை அவிழ்த்துவிட்டு அப்பாவிடம் அப்படி நிற்ப்பது அவனுக்கு கூச்சமாக இருந்தது.அப்பா அவனை குளிக்க வைத்து அவனது உள்ளங்காலை எடுத்து தேய்க்க ஆரம்பித்தார்.அவனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.அதை அப்பாவிடம் இருந்து மறைக்கும் விதமாக பற்க்களை இருக்க கடித்துக்கொண்டான்.இருந்தும் அவனால் முடியவில்லை.

அம்மா அவனுக்கு சுத்தமான கால்ச்சட்டை சொக்காய் அணிவித்து நேற்றி நிறைய திருநீர் பட்டை போட்டுவிட்டு. சுடச் சுட நடுவில் குழிபரித்து நல்லென்னெய் விட்டு அதில் வெள்ளக் கட்டி ஒன்று பதித்த வெந்தயக்களி தட்டை கொடுத்தாள்.

அவன் அதை இருவிரல்களாலும் நக்கி சுவைத்துக் கொண்டிருந்த தருணத்தில் எங்கிருந்தோ வந்த அண்ணன் " என்ன டா கரச்சா மண்ட. எந்த கரையான் புத்துக்குள்ள தலையவிட்ட ? " என்று சொல்லி தலையில் ஒரு தட்டு தட்டினான் .சாப்பிட்டுக்கொண்டிருந்த களி மூக்கில் சென்று இழுகியது.அய்ய‌னாருக்கு கோப‌ம் பொத்துக்கொண்டுவ‌ந்த‌து

கண்கள் சிவக்க வீட்டில் இருந்த நிலைக் கண்ணாடியை நோக்கி ஓடினான்.தலையை முன்னும் பின்னும் அப்படியும் இப்டியும் அசைத்து கண்ணாடியில் பார்த்துக்கொண்டான்.அண்ணன் சொன்னது உண்மை போல் பட்டது அவனுக்கு.கோபம் கண்ணீராக மாறி அழுகையாக கரைந்தது.அவன் அழுததை கண்ணாடி அப்படியே பிரதிபலித்தது.அது பார்ப்பதற்க்கு ரசம் போன பேச்சியின் கண்ணாடியில் பார்த்த முகத்தை விடவும் அசிங்கமாக இருந்தது.



குறிப்பு :
========

[  பதின் வயது நினைவுகளை பற்றி எழுத வேண்டும் என்று
  கமலேஷ் கேட்டுக்கொண்டார். எனக்கு எழுத வேண்டும் என்று தொடங்கியதும் இதுதான் வந்து விழுந்தது.இது பதின் வயது நினைவுகளில் வருமா என்று தெரியாது.பதின் வயது நினைவுகளில் காதல் பற்றி இருக்க வேண்டும் என்று நண்பர்கள் கூறினார்கள்.எனக்கு சின்ன வயதில் ஏற்ப்பட்ட அனுபவத்தை ஒரு கதை போல் சொல்ல முயற்ச்சித்துள்ளேன்.பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும். ]