Tuesday, December 1, 2009

நம்பிக்கை

வறுமையுடன் தாய் ஊரில்
ஆசையுடன் தமையன் விடுதியில்
கனவுகளுடன்  தமக்கை  புகுந்த வீட்டில்
குழ‌ப்பத்துடன் நண்பன் அருகில்
ஆவலுடன் வங்கியாளன் தொலைபேசியில்
அனைவரும் காத்திருக்கிறார்கள்
எனக்காக
நான் காத்திருப்பதோ
இவைகள் அனைத்துடனும்
இருபது தேதிக்கு பிறகு
பிரதி மாதம்
முதல் தேதிக்காக.

2 comments:

கமலேஷ் said...

எதார்த்தமான வாழ்க்கை...

எதார்த்த கவிதை...

Mohan said...

கவிதை நல்லா வந்திருக்கு!

Post a Comment